/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு - வடமாநிலங்கள் சிறப்பு ரயில்கள் இயக்கம்
/
ஈரோடு - வடமாநிலங்கள் சிறப்பு ரயில்கள் இயக்கம்
ADDED : ஏப் 23, 2024 09:32 PM
சேலம்:வரும், 26 முதல், ஈரோட்டில் இருந்து ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:
கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பயணியர் வசதிக்கு ஈரோட்டில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு, வரும், 26 முதல், ஜூன், 28 வரை வார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
வெள்ளிதோறும் மதியம், 1:30க்கு ஈரோட்டில் புறப்படும் ரயில், ஞாயிறு காலை, 8:30 மணிக்கு தன்பாத்தை அடையும்.
மறுமார்க்கத்தில் திங்கள் மாலை, 6:00க்கு புறப்படும் ரயில் புதன் மதியம், 2:00 மணிக்கு ஈரோட்டை அடையும். இந்த ரயில் ஜூலை, 1 வரை இயக்கப்படும். இந்த ரயில்கள், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
அதேபோல், ஈரோட்டில் இருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூருக்கு மே, 1 முதல், வார சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. புதன்தோறும் காலை, 11:35க்கு சம்பல்பூரில் புறப்படும் ரயில் மறுநாள் இரவு, 8:30 மணிக்கு ஈரோட்டை அடையும். இந்த ரயில் ஜூன், 26 வரை இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் ஈரோட்டில் வெள்ளிதோறும் மதியம், 2:45க்கு புறப்படும் ரயில், சனி இரவு, 11:15 மணிக்கு சம்பல்பூரை அடையும். இது ஜூன், 28 வரை இயக்கப்படும். இந்த ரயில்கள் ஜோலார்பேட்டை, சேலம் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும்.

