sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரவில் வீட்டு கதவை தட்டும் சைக்கோவால் மக்கள் அச்சம்

/

இரவில் வீட்டு கதவை தட்டும் சைக்கோவால் மக்கள் அச்சம்

இரவில் வீட்டு கதவை தட்டும் சைக்கோவால் மக்கள் அச்சம்

இரவில் வீட்டு கதவை தட்டும் சைக்கோவால் மக்கள் அச்சம்


ADDED : ஜூலை 26, 2024 12:53 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,:ஈரோடு அருகே சோலார் ஈ.பி.நகரில் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் இருப்பதை மக்கள் உணர்ந்தனர். இதனால் பல இடங்களில் 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தினர். இதில் கடந்த, 9ம் தேதி ஒரு ஆசாமி, கையில் கத்தியுடன் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டுவது, காலிங் பெல்லை அழுத்தும் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மொடக்குறிச்சி போலீசாருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.

மக்கள் கூறியதாவது:

நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் நடமாடும் நபர் குறித்து போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளின் கதவை தட்டுவது, காலிங் பெல் அடிப்பது இன்றளவும் அவ்வப்போது தொடர்கிறது. இதனால் இரவில் வீட்டுக்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீடு, வீடாக கதவை தட்டுவது, காலிங் பெல்லை அடித்து சிறிது நேரம் நிற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் திருடனாக இருக்க முடியாது. இது மேலும் அச்சத்தை அதிகப்படுத்துகிறது. அந்த நபர் சைக்கோவாக இருக்கக் கூடும் என நம்புகிறோம். நள்ளிரவில் அந்த நபர் கண்களில் படும் நபர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. இவ்விஷயத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மக்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us