ADDED : செப் 12, 2026 07:27 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சட்டசபை
தேர்தலுக்கு முன்பாக, சென்னிமலை யூனியன் பகுதிகளில் வழங்கப்பட்ட,
இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கு உரிய நிலங்களை அளந்து
அத்துக்காட்டாமல் தாமதப்படுத்துவதை கண்டித்தும், சென்னிமலை -
பெருந்துறை ரோடு நொய்யல் அத்திக்காடு வரை சாலை விரிவாக்கப்பணி
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், சென்னிமலை ரிங்
ரோடு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், சென்னிமலை பஸ்
ஸ்டாண்ட் முன், வரும், 18ம் தேதி மாலை, கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தப்படும்.
இத்தகவலை சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பிரபு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஸ்
தெரிவித்துள்ளனர்.
