ADDED : ஜூலை 29, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்
பணியாளர் சங்கம் சார்பில், உட்கோட்ட பேரவை கூட்டம், கோபியில் நேற்று நடந்தது. உட்கோட்ட தலைவர் பழனிவேலு தலைமை வகித்தார். உட்கோட்ட இணை செயலாளர் ஜோதி-லிங்கம் அனைவரையும் வரவேற்றார். கோட்ட செயலாளர் கருப்-புச்சாமி பேசினார். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத பணியாளர்க-ளுக்கு, ஊதிய மாற்றம் மற்றும் தர ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு ஊதியத்தில், ௧௦ சதவீதம் ஆபத்துப்-படி, நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறை-வேற்றினர். சுப்பிரமணியம் நன்றி கூறினார்.