/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊரக வளர்ச்சியினர் போராட்டம்: பஞ்சாயத்து அலுவலகங்கள் 'வெறிச்'
/
ஊரக வளர்ச்சியினர் போராட்டம்: பஞ்சாயத்து அலுவலகங்கள் 'வெறிச்'
ஊரக வளர்ச்சியினர் போராட்டம்: பஞ்சாயத்து அலுவலகங்கள் 'வெறிச்'
ஊரக வளர்ச்சியினர் போராட்டம்: பஞ்சாயத்து அலுவலகங்கள் 'வெறிச்'
ADDED : ஆக 23, 2024 02:35 AM
ஈரோடு:ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலர் பணியிடங்கள் உட்பட அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
பஞ்சாயத்து செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உட்பட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கைகளை முன்வைத்து ஈரோடு மாவட்டத்தில் நேற்று, பஞ்சாயத்து செயலர் முதல், வட்டார வளர்ச்சி அலுவலர் வரையிலான ஊரக வளர்ச்சி துறையினர், 641 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அனைத்து பி.டி.ஓ., அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டன.

