sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபட்டுகள் மீது கார் மோதியதில் அக்கா, தம்பி பலி

/

மொபட்டுகள் மீது கார் மோதியதில் அக்கா, தம்பி பலி

மொபட்டுகள் மீது கார் மோதியதில் அக்கா, தம்பி பலி

மொபட்டுகள் மீது கார் மோதியதில் அக்கா, தம்பி பலி


ADDED : செப் 03, 2024 04:15 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே, இரு மொபட்கள் மீது, கார் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் சேட்டு, 56. இவரது அக்கா மல்லிகா, 60, உறவினர் பானுமதி, 62. இவர்கள் மூவரும் சேலத்தில் இருந்து, எக்ஸ்எல் ஹெவி டூட்டி மொபட்டில், தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூரில் உள்ள, குலதெய்வ கோவிலுக்கு நேற்று வந்தனர். மதியம் 12:45 மணிக்கு அழகுசமுத்திரம் அருகே, படையப்பா நகர் பகுதியில் மொபட்டில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே, சேலம் சித்தனுாரை சேர்ந்த ஜவஹர், 49, என்பவர் ஓட்டி வந்த பிஎம்.டபிள்யூ கார், மொபட் மீது வேகமாக மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த காயங்களுடன் சேட்டு, மல்லிகா ஆகியோர் இறந்தனர். பானுமதி பலத்த காயமடைந்தார். மொபட் மீது மோதி நிற்காமல் சென்ற கார், சிறிது தூரத்தில் எதிரே வந்த கருக்கல்வாடி புகையிலைக்காரன் தெருவை சேர்ந்த கந்தசாமி, 57, என்பவர் ஓட்டி வந்த ஆக்டிவா மொபட் மீது மோதி நின்றது.இதில் காயமடைந்த கந்தசாமியை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மக்கள் காரில் வந்த ஜவஹரை பிடித்து, தாரமங்கலம் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார், ஜவஹரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்






      Dinamalar
      Follow us