ADDED : ஆக 30, 2024 04:09 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம், தோப்பூரை சேர்ந்தவர் சத்யா, 40; கணவர் ரங்கநாதன் இறந்துவிட்டார். தந்தை முத்தானுடன் வசித்து வருகிறார். சத்யாவின் மகள் நிவேதா, 24; இவரின் கணவர் சத்தி அருகே கொண்டப்பநாயக்-கன்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, 25; காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், தாய் வீட்டில் ஓராண்டுக்கும் மேலாக நிவேதா வசித்து வருகிறார்.
நிவேதாவை பலமுறை குடும்பம் நடத்த அழைத்தும், அவர் மறுத்துள்ளார். இதற்கு மாமியாரே காரணம் என நினைத்துள்ளார். நேற்று அதிகாலை, 1:00 மணி அளவில் மாமியார் வீட்டுக்கு சென்ற கார்த்தி, கோவிலில் வைத்திருக்கும் வேலால் அவரது கழுத்து, மார்பு மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக குத்தி-யுள்ளார். அவர் சத்தமிட்டதால் எழுந்த தந்தை முத்தான் தடுத்-துள்ளார். அவரையும் இடது தோள்பட்டையில் குத்திவிட்டு ஓட்டம் பிடித்து விட்டார். இருவரும் கோபி அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டனர். தலைமறைவான கார்த்தியை, பங்க-ளாபுதுார் போலீசார் தேடி வருகின்றனர்.

