/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் 3 சிக்னலில் வெயில் தடுப்பு பந்தல்
/
மாநகரில் 3 சிக்னலில் வெயில் தடுப்பு பந்தல்
ADDED : மே 05, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோட்டில்
வெயில் சுட்டெரிப்பதோடு, நாளுக்கு நாள் வெயிலின் அளவும் அதிகரித்து
வருகிறது. காலை, 8:00 மணி முதலே வெயிலின் அளவு படிப்படியாக
அதிகரித்து, மாலை, 5:00 மணி வரை தாக்கம் குறைவதில்லை. இந்நிலையில்
மாநகரில் மூன்று இடங்களில் சிக்னலுக்காக வாகன ஓட்டிகள் நிற்கும்
இடங்களில், மேற்புரம் பந்தல் அமைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுபற்றி
போலீசார் கூறியதாவது: ஈரோடு கலெக்டர் அலுவலக சிக்னல், ப.செ.பார்க்
சிக்னல், காளை மாட்டு சிலை சிக்னல் ெந மூன்று இடங்களில் கோடை பந்தல்
அமைக்கப்பட உள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏற்கனவே இந்த
வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.