/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'சட்டத்தை ஆயுதமாக எடுத்து தீர்ப்பு வழங்குங்கள்' உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேச்சு
/
'சட்டத்தை ஆயுதமாக எடுத்து தீர்ப்பு வழங்குங்கள்' உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேச்சு
'சட்டத்தை ஆயுதமாக எடுத்து தீர்ப்பு வழங்குங்கள்' உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேச்சு
'சட்டத்தை ஆயுதமாக எடுத்து தீர்ப்பு வழங்குங்கள்' உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேச்சு
ADDED : ஆக 25, 2024 07:36 AM

ஈரோடு: ''சட்டத்தை ஆயுதமாக எடுத்து தீர்ப்பு வழங்குங்கள்,'' என்று, ஈரோட்டில் நடந்த நிகழ்வில், உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசினார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி சார்பு நீதிமன்றம், எழுமாத்துார் மாவட்ட முன்சீப் மற்றும் நடுவர் நீதிமன்றம் துவக்க விழா மற்றும் பெருந்துறையில் புனரமைக்கப்பட்ட நடுவர் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழா, காணொலி காட்சி மூலம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்து, கொடுமுடி சார்பு நீதிமன்-றத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
மக்களுக்கு விரைவாக தீர்ப்பு கிடைக்கப்பட வேண்டும் என்பதற்-காக, புதிது, புதிதாக நீதிமன்றங்கள் மக்களுக்காக உருவாக்கப்படு-கிறது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை 'நீதியரசர்கள்' என அவர்களது மாண்பை குறிப்பிடுகின்றனர். நீதித்துறையில் அவ்வாறான நீதிபதிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை நீதிக்கா-கவே பணி செய்கின்றனர் என்பதை உணர வேண்டும். நமது நோக்கம், தர்மத்தை காக்க வேண்டும் என்பதேயாகும். சட்டமன்-றமும், நீதிமன்றமும் முற்றிலும் வேறு. எனது தந்தை மூத்த வக்கீல் முத்துசாமி மற்றும் பலரும் சேர்ந்து ஈரோட்டில் மாவட்ட நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என அரசிடம் கோரியபோது, சட்ட அமைச்சர் மறுத்துவிட்டார். பின், முதல்வர் அண்ணாது-ரையை சந்தித்து பேசினர். ஈரோடு பகுதியில் உள்ள குற்ற வழக்-குகள், பிற வழக்குகளின் புள்ளிவிபரங்களை வழங்கி, நீதிமன்-றத்தின் அவசியத்தை விளக்கினர். ஈ.வெ.ரா., பிறந்த மண்ணில் மாவட்ட நீதிமன்றம் தேவை என்பது பரிசீலிக்கப்படும், என்றார்.
அப்போது முதல்வர் அண்ணாதுரை, 'காயங்கள் நியாயப்படுத்தப்-பட வேண்டும்; நியாயங்கள் காயப்படுத்தப்படக்கூடாது' என்றார். இதை நான் இப்போதும், வக்கீல்கள், நீதிபதிகளிடம் கூறி, அதன் உண்மையை விளக்குவேன். சட்டத்தை ஆயுதமாக எடுத்து, பாகுபாடின்றி தீர்ப்பு வழங்குங்கள். அப்போதுதான் நீதி-மன்றத்துக்கு அங்கீகாரம், நம்பிக்கை கிடைக்கும். நீதிமன்றங்கள் புதிதாக வருவது நல்லதுதான். ஆனால், அது மக்களை நோக்கி செல்ல வேண்டும். இவ்வாறு பேசினார்.
நிகழ்வில் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ண-குமார், உயர்நீதி மன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், சதீஸ்குமார், குமரேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
'புதிதாக தேர்வாகியுள்ள 233 சிவில் நீதிபதிகள்'
விழாவில் எழுமாத்துார் மாவட்ட முன்சீப் மற்றும் நடுவர் நீதி-மன்றம் துவக்கி வைத்து, சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பேசியதாவது:
புதிய நீதிமன்றங்கள் துவக்கி வைக்கப்படுவதால், ஈரோடு மாவட்-டத்தில் நீதிமன்றங்களின் எண்ணிக்கை, 41 ஆகி உள்ளது. புதிய நீதிமன்றங்கள் உருவாக்கப்படும் நிலையிலும், பல வழக்குகள் தேங்கி கிடப்பதை பார்க்கிறோம். பல வழக்குகள், 10, 15 ஆண்-டுகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காண வேண்டும். நீதிமன்றங்களில் பழைய, தேங்கிய வழக்-குகளுக்கு விரைவாக தீர்ப்பு கிடைக்கும்போது மக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை ஏற்படும். அல்லது நம்பிக்கை குறையும். ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு நீதிமன்றம் ஏற்படுத்த உச்சநீதிமன்றம் வலியுறுத்துகிறது.
இதன்படி புதிதாக, 300 நீதித்துறை நடுவர் பணிக்கு கோரப்பட்டு, 233 சிவில் நீதிபதிகள் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு விரைவில் ஆணை வழங்கி, பணியில் இணைவார்கள். அவர்கள் வரும்போது, ஏற்கனவே பணி செய்யும் நீதிபதிகளுக்கு பதவி உயர்வு தானாக கிடைக்கும். இவ்வாறு பேசினார்.
'மக்களுடன் நெருக்கம் அதிகரிக்கும்'
பெருந்துறையில் புனரமைக்கப்பட்ட நடுவர் நீதிமன்ற கட்ட-டத்தை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் திறந்து வைத்து பேசியதாவது:
ஒவ்வொரு புதிய நீதிமன்றங்கள் ஏற்படும்போதும், நீதித்து-றைக்கும் - மக்களுக்குமான நெருக்கத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம், அவர்களுக்கு விரைவான தீர்ப்புகள் கிடைக்கப் பெறுகி-றது. பெருந்துறையில் தற்போது சீரமைக்கப்பட்ட கட்டடம், 121 ஆண்டு பழமையான கட்டடம். அதன் பழமை மாறாமல் சீர-மைக்கப்பட்டதால், மேலும் பல ஆண்டுகளுக்கு இந்நீதிமன்றம் மக்களுக்கான பலனை வழங்கும். இவ்வாறு பேசினார். நிகழ்வில் உயர்நீதி மன்ற நீதிபதிகள் சதீஸ்குமார், குமரேஷ்பாபு, ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி முருகேசன், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்.பி., (பொறுப்பு) அபிஷேக் குப்தா உட்பட நீதிப-திகள், வக்கீல்கள் பங்கேற்றனர். ஈரோடு முதன்மை குற்றவியல் நீதிபதி சரவணன் நன்றி கூறினார்.