/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலி முத்திரை சான்று தயாரித்த வாலிபர் கைது
/
போலி முத்திரை சான்று தயாரித்த வாலிபர் கைது
ADDED : ஆக 30, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்,
கோபியை சேர்ந்தவர் தீபக் விஜய், 24; கோபியில் தராசு கடை நடத்தி வருகிறார். சத்தியமங்கலம் பகுதியில் பிரபலமான நகை, மளிகை, பைனான்ஸ் மற்றும் கடைகளுக்கு தராசு முத்திரை சான்றுகளை போலியாக தயார் செய்து கொடுத்துள்ளார்.
சத்தி தொழிலாளர் நல ஆய்வாளர் லோகநாதன், கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது, இந்த மோசடியை கண்டுபிடித்தார். அவர் புகாரின்படி சத்தி போலீசார், தீபக் விஜயை நேற்று கைது செய்தனர்.

