/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீபாவளிக்கு முன்பே வாரச்சந்தை அமைக்க வேண்டும் மாநகராட்சிக்கு ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை
/
தீபாவளிக்கு முன்பே வாரச்சந்தை அமைக்க வேண்டும் மாநகராட்சிக்கு ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை
தீபாவளிக்கு முன்பே வாரச்சந்தை அமைக்க வேண்டும் மாநகராட்சிக்கு ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை
தீபாவளிக்கு முன்பே வாரச்சந்தை அமைக்க வேண்டும் மாநகராட்சிக்கு ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 30, 2024 03:29 AM
ஈரோடு: ஈரோட்டில் தீபாவளிக்கு முன் வாரச்சந்தை அமைக்க, மாநகராட்சி ஆணையாளருக்கு, ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.
தென்னிந்திய அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புகழ் பெற்ற ஈரோட்டில், திங்கள் மாலை முதல் செவ்வாய்கி-ழமை மாலை வரை நடக்கும் ஜவுளி வாரச்சந்தை பிரபலமானது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட வியாபாரிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகள் அதிகளவு மொத்தமாக ஜவுளி கொள்-முதல் செய்வது வழக்கம்.
கனி மார்க்கெட் வளாகத்தில் ஜவுளி வாரச்சந்தை நடந்து வந்த நிலையில், புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக அகற்றப்பட்-டது. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் வாரச்-சந்தை நடந்து வருகிறது. இந்நிலையில் ஜவுளி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள காலியிடத்தில், மீண்டும் வாரச்சந்தை அமைக்க, மாநக-ராட்சி நிர்வாகத்துக்கு, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன், ஜவுளி வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று, மாநகராட்சி ஆணை-யாளர் மனிஷிடம், ஜவுளி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஜவுளி வாரச்சந்தை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: தலைசிறந்த ஜவுளி சந்தைக்கு புகழ்பெற்ற ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை, 60 ஆண்டுக-ளாக புகழ்பெற்றது. இதன் மூலம், 720 வியாபாரிகள் பயன்-பெற்று வந்தனர். 2018ல் கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டு-மான பணி தொடங்கியபோது, வாரச்சந்தை வியாபாரிகள் வெளி-யேற்றப்பட்டனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்-குறியாகியது. அப்போதிருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், கனி மார்க்கெட் வளாக காலியிடத்தில், மீண்டும் வாரச்சந்தை அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர்.இதேபோல் தற்போ-தைய அரசியல்வாதிகளும் உறுதியளித்தனர்.
ஆனாலும், இது-வரை வாரச்சந்தை அமைக்கப்படவில்லை. தற்போது, காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் தனியார் இடத்தில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையால், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படு-கின்றனர். குறிப்பாக தனியாருக்கு அதிக வாடகை செலுத்த வேண்டியுள்ளது. போதிய அளவில் வியாபாரமும் நடப்ப-தில்லை.
எனவே, மாநகரத்தின் மையப்பகுதியான கனி மார்க்கெட்டில், மீண்டும் வாரச்சந்தை அமைக்கப்பட்டால், அதை நம்பியுள்ள, 720 வியாபாரிகளும் பயன் பெறுவர். இதன் மூலம் மாநகராட்-சிக்கும் உரிய வருவாய் கிடைக்கும். தீபாவளிக்கு முன்னதாக வாரச்சந்தை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.