ADDED : மே 31, 2024 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனின் இரண்டாவது பிளாட்பார்மில், நேற்று முன்தினம் ஒரு முதியவர், பேச்சு மூச்சின்றி மயங்கி கிடந்தார்.
ரயில்வே போலீசார் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.