/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயியை தாக்கியவர் கவுந்தப்பாடி அருகே கைது
/
விவசாயியை தாக்கியவர் கவுந்தப்பாடி அருகே கைது
ADDED : ஆக 04, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, ;கவுந்தப்பாடி அருகே சின்னாக்கவுண்டனுாரை சேர்ந்த விவசாயி செல்வராஜ், 64; அதே பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 60; இவர் நிர்வாண பூஜை செய்வதாக கூறி, துணிகளை கழற்றி வைத்து, அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
ஊர்க்காரர்களிடம் தெரிவித்ததால், செல்வராஜ் மீது சிவக்குமார் விரோதம் கொண்டிருந்தார். இந்நிலையில் சிவக்குமாரின் வீட்டு வழியாக செல்வராஜ் நேற்று காலை சென்றுள்ளார். அப்போது தகாத வார்த்தை பேசி, செல்வராஜை உலக்கையால் தாக்கிவிட்டு, சிவக்குமார் ஓடினார். செல்வராஜ் புகாரின்படி, சிவக்குமாரை கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர்.