/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தியவர் கைது
/
பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தியவர் கைது
ADDED : செப் 01, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனபால், 55, கூலி தொழிலாளி.
இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சங்கர், 40; சாலையோரங்களில் கடை போட்டு சோப்பு டப்பா, கண்ணாடி, சீப்புகளை விற்பவர். நேற்று முன் தினம் இரவு சங்கர் மது போதையில், சத்தம்போட்டு தகாத வார்த்தை பேசி துாங்குவதற்கு இடையூறாக இருந்துள்ளார். இதை தட்டிக்கேட்டை தனபாலை, சிறு கத்தியால் மார்பில் குத்தியுள்ளார். தனபால் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் சங்கரை கைது செய்தனர்.