/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபைல்போனில் பேசிக்கொண்டு இருந்தவர் மயங்கி விழுந்து மரணம்
/
மொபைல்போனில் பேசிக்கொண்டு இருந்தவர் மயங்கி விழுந்து மரணம்
மொபைல்போனில் பேசிக்கொண்டு இருந்தவர் மயங்கி விழுந்து மரணம்
மொபைல்போனில் பேசிக்கொண்டு இருந்தவர் மயங்கி விழுந்து மரணம்
ADDED : நவ 07, 2024 01:30 AM
மொபைல்போனில் பேசிக்கொண்டு
இருந்தவர் மயங்கி விழுந்து மரணம்
அந்தியூர், நவ. 7-
ஈரோடு மாவட்டம், அந்தியூர், அண்ணாமடுவு ரவுண்டானா அருகில் நீண்ட நேரமாக மயங்கிய நிலையில் ஒருவர் கிடந்துள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.அந்தியூர் போலீசார் நடத்திய விசாரணையில், அண்ணாமடுவு பால் சொசைட்டி அருகே வசித்து வரும் செந்தில், 31, என்பதும், இவர் சலுான் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு செல்லும்போது, ரவுண்டானா அருகே உள்ள திட்டில் அமர்ந்து, நண்பர்களுடன் மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். மேலும் இறந்தவருக்கு, சர்க்கரை வியாதி இருந்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவ பரிசோதனை எதுவும் செய்யாமல், மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.