ADDED : ஆக 23, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், ஆக. 23-
தமிழ்நாடு
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும்
இரண்டு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. இதன்படி
சத்தி யூனியன் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலக
பணி பெரிதும் பாதிக்கப்பட்டது.
*சென்னிமலை யூனியன் அலுவலகத்துக்கு,
ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் நேற்று பூட்டப்பட்டிருந்தது. இதனால்
முருங்கத்தொழுவு ஊராட்சியில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் முகாமை,
வருவாய் துறையினர் நடத்தினர்.