/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாகிரெட்டிபாளைம் ஏரியில் மண் கடத்திய மூவர் கைது
/
நாகிரெட்டிபாளைம் ஏரியில் மண் கடத்திய மூவர் கைது
ADDED : செப் 07, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: ஒலகடம் அருகே நாகிரெட்டிபாளையம் பகுதியில், மண் கடத்தல் நடப்பதாக புகார் போனது. இதையடுத்து பவானி மண்-டல தாசில்தார் பழனிவேல், குறிச்சி ஆர்.ஐ., குமாரவேல், வி.ஏ.ஓ., ராமசாமி ஆகியோர் நேற்று தணிக்கை மேற்கொண்-டனர்.
அப்போது நாகிரெட்டிபாளையம் ஏரியில் சட்ட விரோத-மாக மண் அள்ளியவர்கள், அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் அட்டவணைப்புதுாரை சேர்ந்த செந்தில்-குமார், 45; கந்தசாமி, 42; கோபால், 27; ஆகியோர் சிக்கினர். மண் அள்ள பயன்படுத்திய டிப்பர் லாரி, ஜே.சி.பி., இயந்தி-ரத்தை பறிமுதல் செய்து, வெள்ளித்திருப்பூர் போலீசில் ஒப்ப-டைத்தனர். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.