/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நக்சல் தேடுதல் வேட்டையில் தென்பட்ட புலிகள் தடம்
/
நக்சல் தேடுதல் வேட்டையில் தென்பட்ட புலிகள் தடம்
ADDED : ஆக 30, 2024 01:05 AM
ஈரோடு, ஆக. 30-
ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறை மற்றும் அதிரடி படையினருடன் இணைந்து, கடம்பூர் வனச்சரக பகுதிகளில், நக்சல் தேடுதலில் ஈடுபட்டனர். குத்தியாலத்துார், அரிகியம், மாரிகட்டை, ஒரு சட்டி பள்ளம், வாட்டாள் மடுவு, குமிட்டமலை, கோம்பை தொட்டி பகுதிகளில், 14 கி.மீ., நடந்து சென்று தேடினர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நக்சல் தேடுதல் வழித்தடத்தில் புலி மற்றும் கரடிகளின் கால்தடம் மற்றும் எச்சம் காணப்பட்டது. அப்பகுதிகளில் நீரோட்டம் இருப்பது புதிய நபர்களுக்கு குறிப்பாக நக்சல் நடமாட்டத்துக்கு ஏதுவாக இருக்கும். இதை கருத்தில் கொண்டுதான் தேடுதலில் ஈடுபட்டோம். அப்பகுதி வன கிராமங்களில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.