sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வணிக வளாகத்தில் காய்கறி வியாபாரம்

/

வணிக வளாகத்தில் காய்கறி வியாபாரம்

வணிக வளாகத்தில் காய்கறி வியாபாரம்

வணிக வளாகத்தில் காய்கறி வியாபாரம்


ADDED : ஆக 04, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே மொடச்சூரில், சனிக்கிழமை தோறும் கூடும் வாரச்சந்தை நடக்கிறது. சந்தை நுழைவு வாயிலில் இருந்து, அண்ணா நகர் வழிச்சாலையில், சிறு வியாபாரிகள் கடை போடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் அதே பகுதியில், 1.73 கோடி ரூபாயில் கூடாரத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டது. கடந்த மாதம், ௬ம் தேதி இந்த வணிக வளாகம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

ஆனால், பல வியாபாரிகள், வணிக வளாக கூடாரத்துக்குள் செல்லாமல், பழைய இடத்திலேயே வியாபாரம் செய்தனர். இதனால் வணிக வளாக கூடாரத்துக்குள் கடை வைத்திருப்போர் வருத்தம் தெரிவித்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் கடந்த வாரம் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக நேற்று கூடிய வாரச்சந்தையில், அனைத்து காய்கறி கடைகளும், வணிக வளாக கூடாரத்துக்குள் செயல்பட்டன.

ஆடிப்பெருக்கு விழா என்பதால் சில கடைக்காரர்கள் இந்த வாரம் கடை போட வரவில்லை என்று வியாபாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us