/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் 'டிஸ்மிஸ்'
/
வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் 'டிஸ்மிஸ்'
ADDED : ஆக 02, 2024 02:02 AM
வெள்ளகோவில், பணியில் ஒழுங்கீனமாக இருந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.
வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலராக இருந்தவர் பிரபாகரன், 52; சட்டப்படி திருமணம் செய்யாத பெண்ணுக்கு பிறந்த குழந்தையை, பணி பதிவேட்டில் பதிவு செய்தது உள்ளிட்ட பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இரண்டாவது திருமணம் குறித்து அவரது முதல் மனைவியும் உயரதிகாரிகளிடம் புகாரளித்திருந்தார்.
இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, கோவை மண்டல இணை இயக்குனர் சரவணக்குமார் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். பணி பதிவேட்டில் பதிவு செய்தது உள்ளிட்ட சில புகார்கள் உண்மை என நிருபணமானது. இதன் அடிப்படையில் பிரபாகரனை 'டிஸ்மிஸ்' செய்து, இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தீயணைப்பு நிலைய ஊழியர்கள் சிலர் கூறியதாவது: பிரபாகரனுக்கு முதல் திருணமாகி இரண்டு மகன்கள் உள்ளதனர். இரண்டாவது திருமணம் செய்து, அவருக்கு இரு மகள் உள்ளது. இதுகுறித்து முதல் மனைவி அளித்த புகாரில் விசாரணை நடந்தது. இதில்லாமல் வேறு பெண்களுடனும் பழக்கத்தில் இருந்ததாக புகார் எழுந்தது. அனைத்து புகார் குறித்தும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கூறினர். இதனிடையே டிஸ்மிஸ் உத்தரவை எதிர்த்து, பிரபாகரன் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிகிறது.