sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நீர் நிலைகளில் கலக்கும் சாய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?

/

நீர் நிலைகளில் கலக்கும் சாய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?

நீர் நிலைகளில் கலக்கும் சாய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?

நீர் நிலைகளில் கலக்கும் சாய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?


ADDED : பிப் 27, 2025 09:54 PM

Google News

ADDED : பிப் 27, 2025 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:

நீர் நிலைகளில் சாய, சலவை, கழிவு நீர் நேரடியாக கலப்பதால், சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வலியுறுத்தப்பட்டது.

ஈரோட்டில், வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் ஆர்.டி.ஓ., ரவி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், தமிழக ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் பேசியதாவது:

ஈரோடு பகுதியில் சாய, சலவை, தோல் ஆலை கழிவும், மாநகர கழிவுநீரும் சுத்திகரிப்பு செய்யாமல், காளிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கிறது. பொதுப்பணித்துறையின் பேபி வாய்க்கால் துார்வாரி சுத்தம் செய்யாததால், கழிவு நீர் தனியாக பிரிந்து செல்ல வழி இல்லை. அவ்வாறு செய்யாததால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கேன்சர், எலும்பு பாதிப்பு நோய், தோல் நோயால் பாதிக்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஈரோடு, 46 புதுாரில் விளை நிலங்கள், பிற பயன்பாட்டுக்கான நிலங்கள் உள்ளன. சாலையை ஆக்கிரமித்து, வேலி அமைத்துள்ளதால் விவசாயம் செய்ய இயலவில்லை. மக்கள் பாதிப்பதால், அதனை அளவீடு செய்து அகற்ற வேண்டும் என, தெய்வசிகாமணி என்பவர் மனு வழங்கினார்.

மொடக்குறிச்சி தாலுகா, துய்யம்பூந்துறை கண்டிகாட்டுவலசில், கொப்பு வாய்க்காலில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு, மரங்களை அகற்ற வேண்டும் என, சுப்பிரமணியம் மற்றும் சிலர் மனு வழங்கினர். இவைகள் உட்பட, 30க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த துறையினருக்கு ஆர்.டி.ஓ., ரவி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us