sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புதர் மண்டிய சோழா நகர் பூங்கா மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?

/

புதர் மண்டிய சோழா நகர் பூங்கா மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?

புதர் மண்டிய சோழா நகர் பூங்கா மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?

புதர் மண்டிய சோழா நகர் பூங்கா மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?


ADDED : மே 06, 2024 02:27 AM

Google News

ADDED : மே 06, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் கனிராவுத்தர் குளம் அருகே சோழா நகரில், பூங்கா புதர் மண்டியுள்ளதால், மக்கள் பொழுது போக்க முடியாமல் தவிக்கின்றனர்.

ஈரோடு மாநகர மக்களின் பொழுது போக்கு மற்றும் ஓய்வுக்காக, மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் எட்டாவது வார்டுக்கு உட்பட்ட, கனிராவுத்தர் குளம் அருகேயுள்ள சோழா நகரில், பொழுது போக்கு பூங்கா உள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள், பூச்செடி, நடைபாதை, அமர்ந்து ஓய்வெடுக்கும் இருக்கை, மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. சுற்றுப்பகுதி முதியோர், குழந்தைகள் மாலை வேளை மற்றும் விடுமுறை நாட்களில் பொழுது போக்கி வந்தனர். ஆனால், பராமரிப்பு இல்லாததால், புதர் மண்டி காணப்படுகிறது.

மேலும், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடைபாதை முழுதும் பிளாஸ்டிக், குப்பை குவியலாக உள்ளது. புதர்களின் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது. குழந்தைகள், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைக்க, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us