ADDED : மே 21, 2024 11:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம், பீமராயர் வீதியை சேர்ந்தவர் பால்பாண்டி, 38, பெயிண்டிங் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உள்ளவர். நேற்று மாலை வீட்டுக்குள் இருந்த வாளி நீரில், தலை மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதைக்கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தாராபுரம் போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகம் கழுவ முயன்ற போது, வலிப்பு வந்ததால், வாளி நீரில் விழுந்து இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

