ADDED : ஆக 08, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டில், மொபட் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்-தனர்.
ஈரோடு, மாணிக்கம்பாளையம் முனிப்பன் கோவில் வீதியை சேர்ந்த குணசேகரன் மனைவி ஜோதி, 47. கடந்த, 5 மதியம் 12:00 மணிக்கு டி.வி.எஸ். மொபட்டை வீட்டின் முன் நிறுத்தி வைத்து விட்டு வீட்டுக்குள் சென்றார். மூன்று மணி நேரம் கழித்து பார்த்த போது மொபட் மாயமானது தெரியவந்-தது. வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், வீரப்பன்சத்திரம் திருமலை வீதியை சேர்ந்த அழகேசன், 23, என்பவர் மொபட் திருடியது தெரியவந்-தது. அவரை போலீசார் கைது செய்தனர்.