ADDED : பிப் 24, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த டி.ஜி.புதுாரை சேர்ந்தவர் சஞ்சய், 23; யமஹா ஆர்-15 பைக்கில், புளியம்பட்டியிலுள்ள தனது நண்பரை பார்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தார்.
செண்பகபுதுார் அருகே கோபி சாலையிலிருந்து கோவை சாலையில், பைக் மீது லாரி மோதியது. இதில் சஞ்சய் படுகாயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். லாரி டிரைவரான ஈரோடு, மூலப்பாளையத்தை சேர்ந்த பரமசிவத்திடம், சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

