sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

10 லட்சம் நில உட்பிரிவு பதிவு: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

/

10 லட்சம் நில உட்பிரிவு பதிவு: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

10 லட்சம் நில உட்பிரிவு பதிவு: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

10 லட்சம் நில உட்பிரிவு பதிவு: விவசாயிகளுக்கு வேண்டுகோள்


ADDED : ஜூலை 13, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, 'ஈரோடு மாவட்டத்தில், 10 லட்சம் நில உட்பிரிவுகளை பதிவு செய்ய வேண்டும்' என்று, வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி, விவசாயிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பி.எம்.கிசான் திட்டம், பயிர் கடன் உட்பட அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தடையின்றி பெற, நில விபரங்களை 'அடுக்ககம் திட்டத்தில்' பதிவு செய்து, தனித்துவ அடையாள எண் பெற வேண்டும். மாவட்ட அளவில் விளைநிலங்கள் உட்பட வேளாண் பயன்பாட்டில், 11 லட்சம் நில உட்பிரிவுகள் உள்ளன. இதுவரை ஒரு லட்சம் நில உட்பிரிவுகள் மட்டுமே, 93,793 விவசாயிகளால் பதிவு செய்யப்பட்டு, தனித்துவ அடையாள எண் பெறப்பட்டுள்ளது.

இன்னும், 10 லட்சம் நில உட்பிரிவுகளில் அரசு நிலங்கள், வணிக நிறுவன நிலங்கள், இதர பயன்பாட்டில் உள்ள நிலங்கள் நீங்கலாக உள்ள விவசாய நில உடமைதாரர்கள், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்து தனித்துவ எண் பெற்றால் மட்டுமே, அரசின் திட்ட பயன்களை தொடர்ந்து பெற முடியும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us