ADDED : செப் 24, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, பெரியசேமூர், ஈ.பி.பி.நகரில் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலக உள்ளது. அலுவலக வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில் ஒரு பகுதியில் தேன் கூடு இருந்தது. நேற்று மதியம் கூடு கலைந்து, தேனீக்கள் பறந்தன.
இதில் மண்டல அலுவலக பணியாளர் மற்றும் மக்கள் என, 10க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டின. அனைவரும் அருகிலுள்ள நகர்ப்புற சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர். இதனால் தேன் கூடு அகற்றப்பட்டது.