/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனைத்து பாசனத்திற்கும் நீர் திறப்பு நிறுத்தம் குடிநீருக்காக 100 கன அடி வெளியேற்றம்
/
அனைத்து பாசனத்திற்கும் நீர் திறப்பு நிறுத்தம் குடிநீருக்காக 100 கன அடி வெளியேற்றம்
அனைத்து பாசனத்திற்கும் நீர் திறப்பு நிறுத்தம் குடிநீருக்காக 100 கன அடி வெளியேற்றம்
அனைத்து பாசனத்திற்கும் நீர் திறப்பு நிறுத்தம் குடிநீருக்காக 100 கன அடி வெளியேற்றம்
ADDED : ஏப் 04, 2024 04:32 AM
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால், அரக்கன்கோட்டை தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் பாசனம் உள்ளிட்ட அனைத்து பாசனத்திற்கும் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று மாலை முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு கடந்த ஜன., 7 முதல் கீழ்பவானி வாய்க்காலில் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. பாசன பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள, பல்வேறு நிலைப்பயிர்கள் காப்பாற்றப்படும் வகையில், மே 1 வரை, 12 டி.எம்.சி.,க்கு மிகாமல் ஐந்து சுற்றுக்களாக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று மாலை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதேபோல அரக்கன்கோட்டை தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்ட தண்ணீரும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக, 100 கன அடி தண்ணீர் மட்டும் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 28 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர்மட்டம், 47.78 அடி; நீர் இருப்பு, 3.9 டி.எம்.சி., யாக இருந்தது.

