sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தனியாக இருந்த மூதாட்டி வீட்டில் 13 பவுன் தங்க நகை கொள்ளை

/

தனியாக இருந்த மூதாட்டி வீட்டில் 13 பவுன் தங்க நகை கொள்ளை

தனியாக இருந்த மூதாட்டி வீட்டில் 13 பவுன் தங்க நகை கொள்ளை

தனியாக இருந்த மூதாட்டி வீட்டில் 13 பவுன் தங்க நகை கொள்ளை


ADDED : செப் 30, 2024 12:53 AM

Google News

ADDED : செப் 30, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனியாக இருந்த மூதாட்டி வீட்டில்

13 பவுன் தங்க நகை கொள்ளை

புன்செய் புளியம்பட்டி, செப். 30-

புன்செய்புளியம்பட்டியில், கதவை தாழ்ப்பாள் போடாமல் துாங்கிய மூதாட்டியின் வீட்டின் கதவை திறந்து, தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

புன்செய்புளியம்பட்டி, தோட்டசாலையை சேர்ந்தவர் சரோஜினி, 72. இவரது மகன் ராஜசேகர் வெளியூரில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், தனது மருமகளுடன் அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மருமகள் அவரது தாய் ஊருக்கு சென்ற நிலையில், சரோஜினி வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, சரோஜினி வீட்டின் கதவை தாழ்ப்பாழ் போடாமல் துாங்க சென்றுள்ளார். நள்ளிரவில் வந்த மர்ம நபர் வீட்டின் கதவை திறந்து, பீரோவில் வைத்திருந்த தங்க செயின், மோதிரம் உள்ளிட்ட நகைகளை திருடிச் சென்றுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த சரோஜினி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பினார். புன்செய்புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பீரோவில் வைத்திருந்த தங்க செயின், மோதிரம் என, 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையன் திருடி சென்று விட்டதாக போலீசாரிடம் சரோஜினி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us