/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 133 மாணவர் 'ஆப்சென்ட்'
/
என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 133 மாணவர் 'ஆப்சென்ட்'
ADDED : ஜன 11, 2026 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான, தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவி திட்ட தேர்வு(என்.எம்.எம்.எஸ்.,) நேற்று நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில், 27 தேர்வு மையங்-களில், 6,662 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், 133 பேர் ஆப்சென்ட் ஆகினர். 98 சதவீத மாணவர்கள் எழுதினர். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் என, பிளஸ் 2 படிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்-படும். ஈரோடு கலெக்டர், கந்தசாமி, சித்தோடு அரசு மகளிர் உயர்-நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை, ஆய்வு செய்தார்.

