தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பட்டறையில் தீ விபத்து 14 விசைத்தறிகள் நாசம்

பட்டறையில் தீ விபத்து 14 விசைத்தறிகள் நாசம்

பட்டறையில் தீ விபத்து 14 விசைத்தறிகள் நாசம்


ADDED : மார் 16, 2024 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2024 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயகுமார். சூரம்பட்டிவலசு சாஸ்திரி சாலையில், ஆட்டோலுாம் தறிப்பட்டறை வைத்துள்ளார். இங்கு, 14 விசைத்தறிகள் இயங்குகின்றன.

நேற்று முன்தினம் இரவு பணியில், 10 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு, 11:00 மணிக்கு பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். தீ அதிகமாகி துணி, நுால், விசைத்தறிகளுக்கு

பரவியது.

இதனால் தீயணைப்பு துறைக்கு தகவல் தந்தனர். விரைந்து சென்ற வீரர்கள், 2 மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், 14 விசைத்தறிகளும் தீயில் நாசமானது.

துணி, நுாலும் முழுமையாக சாம்பலானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். சூரம்பட்டி போலீசார்

விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us