sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடிதந்தை, மகள் மீது 150 பேர் புகார்

/

ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடிதந்தை, மகள் மீது 150 பேர் புகார்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடிதந்தை, மகள் மீது 150 பேர் புகார்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடிதந்தை, மகள் மீது 150 பேர் புகார்


ADDED : ஜன 07, 2025 02:02 AM

Google News

ADDED : ஜன 07, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி, 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நுாற்றுக்கும் மேற்பட்டோர், எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தனர்.

ஈரோடு, வீரப்பன்சத்திரம் நேரு வீதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 61; எஸ்.பி., ஜவகரிடம் அளித்த மனுவில் கூறயிருப்பதாவது:

ஈரோடு, கங்காபுரம், கொங்கம்பாளையம், எல்.வி.பி, நகரில் குடியிருந்து, வீரப்பன்சத்திரம், காவிரி ரோடு முருகன் வீதியில் தொழில் செய்து வரும் அழகர்சாமி, நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார். மகள் மாரியம்மாளுடன் சேர்ந்து சிறு

சேமிப்பு ஏலச்சீட்டு நடத்துவதாகவும், நிறைய பேர் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் நான் மூன்று சீட்டு சேர்ந்தேன். தொகையை முறையாக செலுத்தினேன். கடந்த ஜன., மாதம் சீட்டு முடிந்தது. ஆனால் எனது சீட்டுத்தொகையான, ௪.௫௦ லட்சம் ரூபாய் தராமல் இழுத்தடிக்கிறார். அழகர்சாமி, மாரியம்மாள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அழகர்சாமி, மாரியம்மாள் மீது, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக, எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளிக்க நேற்று மாலை, 150 பேர் வந்தனர். ஏலச்சீட்டு மோசடி தொகை, 3 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று, புகார்தாரர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us