/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் 170 வாகனங்களுக்கு அபராதம்
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் 170 வாகனங்களுக்கு அபராதம்
ADDED : நவ 04, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு ஈரோடு பஸ் ஸ்டாண்டில் டூ-வீலர், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர்.
ஆனாலும் பலர் தடையை மீறி பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர், கார்களில் வருகின்றனர். ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார், பஸ் ஸ்டாண்டில் நேற்று முன் தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி வந்த, 80 டூவீலர், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். நேற்றும் காலை முதல் மதியம் வரை பஸ் ஸ்டாண்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, 90 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.