sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2 அரசு பஸ்கள் மோதி விபத்து 3 பெண் பயணிகளுக்கு காயம்

/

2 அரசு பஸ்கள் மோதி விபத்து 3 பெண் பயணிகளுக்கு காயம்

2 அரசு பஸ்கள் மோதி விபத்து 3 பெண் பயணிகளுக்கு காயம்

2 அரசு பஸ்கள் மோதி விபத்து 3 பெண் பயணிகளுக்கு காயம்


ADDED : ஏப் 24, 2025 01:54 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, ஏப் 24

பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து, பழனி செல்லும் அரசு பஸ் நேற்று மதியம் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பவானிசாகர் சாலையில், கொத்தமங்கலம் ராஜீவ் நகர் அருகே சென்றபோது, சாலை வளைவில் எதிரே வந்த அரசு டவுன் பஸ்ஸிற்கு வழி விடுவதற்காக, அரசு பஸ் சற்று வேகத்தை குறைத்த நிலையில், அதே திசையில் பின்னால் பண்ணாரியில் இருந்து புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டு இருந்த பி1 அரசு டவுன் பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பழனி செல்லும் பஸ்ஸின் பின்புறம் மோதியது.

இதில் டவுன் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் அரசு டவுன் பஸ்ஸின் முன்பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த, மூன்று பெண் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயம்பட்டவர்களை மீட்டு, கொத்தமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பவானிசாகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us