/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலரில் கர்நாடகா மது கடத்திய 2 பேர் கைது
/
டூவீலரில் கர்நாடகா மது கடத்திய 2 பேர் கைது
ADDED : அக் 22, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டூவீலரில் கர்நாடகா மது
கடத்திய 2 பேர் கைது
சத்தியமங்கலம், அக். 22-
தாளவாடி அருகே மகாராஜன்புரம் சோதனைச்சாவடி பகுதியில், மதுவிலக்கு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் நெய்தாளபுரம் கந்தசாமி, 36, நாகேஷ், 40, வந்தனர். அவர்கள் வைத்திருந்த பையில், கர்நாடக மாநில மது, 96 பாக்கெட் இருந்தது. டூவீலருடன் மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.