ADDED : நவ 13, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்,:ஆசனுார்
போலீசார், நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு சோதனைச்சாவடி பகுதியில்
வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு பிக்-அப்
வேனில், காலி ரேக்குகளுக்கு அடியில், 350 கிலோ குட்கா பொருட்கள்
இருப்பதை கண்டுபிடித்தனர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து
சத்தியமங்கலத்துக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வது தெரிந்தது.
காரில் வந்த தாளவாடியை சேர்ந்த அப்துல் ஆரிப், 35, சையத் சிக்ரியா, 30,
ஆகியோரை கைது செய்தனர். வேனுடன், 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல்
செய்தனர்.