sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிவேரியில் ஒரே நாளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

/

கொடிவேரியில் ஒரே நாளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

கொடிவேரியில் ஒரே நாளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

கொடிவேரியில் ஒரே நாளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி


ADDED : நவ 03, 2024 01:07 AM

Google News

ADDED : நவ 03, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடிவேரியில் ஒரே நாளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

டி.என்.பாளையம், நவ. 3-

கோவை, ஒண்டிப்புதுாரை சேர்ந்த அழகுராஜன் மகன் ஹரிராஜன், 20; கோவையில் தனியார் கல்லுாரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் பிரிவில், மூன்றாமாண்டு படித்து வந்தார். குடும்பத்தினருடன் கொடிவேரி அணைக்கட்டுக்கு நேற்று வந்தார். அணைக்கட்டு அருகில் செல்லும் பவானி ஆற்றில் குளித்தார். ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். குடும்பத்தினர் கூச்சலிடவே அப்பகுதியில் குளித்த சிலர், ஹரிராஜனை மீட்டனர். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து பங்களாபுதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

பனியன் தொழிலாளி...

திருப்பூர் மாவட்டம் அவினாசி, வடுகுபாளையத்தை சேர்ந்தவர் அங்கப்பன், 36, பனியன் கம்பெனி தொழிலாளி. இவரின் மனைவி ரம்யா, 25; தம்பதிக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை, ஆறு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. அங்கப்பன் தனது நண்பர்களுடன் கொடிவேரி அணைக்கு நேற்று வந்தார். மாலை, 4:௦௦ மணியளவில் பவானி ஆற்றில் நண்பர்களுடன் குளித்தார். நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். பங்களாபுதுார் போலீசார் சடலத்தை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொடிவேரி தடுப்பணை பகுதியில், ஒரே நாளில் இருவர் ஆற்றில் மூழ்கி பலியானது, சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us