/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணிடம் நுாதன மோசடி தனியார் ஊழியர் 2 பேர் கைது
/
பெண்ணிடம் நுாதன மோசடி தனியார் ஊழியர் 2 பேர் கைது
ADDED : அக் 25, 2024 12:58 AM
பெண்ணிடம் நுாதன மோசடி
தனியார் ஊழியர் 2 பேர் கைது
ஈரோடு, அக். 25-
ஈரோடு, கங்காபுரம் கொங்கம்பாளையத்தை சேர்ந்த முருகன் மனைவி வேளாங்கண்ணி, 44; ஈரோட்டில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது வந்த இருவர், ஒரு நிறுவனத்தின் பெயரை கூறி, பெண்ணிடம் இருந்த அந்த நிறுவனத்தின் டெபிட் கார்டை பெற்று இருப்பை சரி பார்த்து விட்டு சென்று விட்டனர். சிறிது நேரத்தில் பெண்ணின் மொபைல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் ஓ.டி.பி., எண் கேட்க அவரும் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புக்கு, ஐ-வாட்ச், துணிகள், ஹெட்போன் எடுத்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
விசாரணையில் ஈரோடு, வெள்ளோட்டம்பரப்பு, மாரியம்மன் கோவில் வீதி பாலகிருஷ்ணன் மகன் கமல கண்ணன், 23; இச்சிபாளையம், குறுக்குவலசு கிருஷ்ணமூர்த்தி மகன் சுகந்த், 23, மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரும் ஈரோட்டில் பிரபல தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரிய வந்தது.

