ADDED : நவ 14, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக மன்னார்குடியில் கொள்முதல் செய்யப்பட்ட, 2,000 ஆயிரம் டன் நெல், ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு ரயிலில் நேற்று வந்தது.
சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக்கப்பட்ட பின், ரேஷன் கடைகளில் மக்களுக்கு வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

