sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருந்துறை சப்--டிவிஷனில் தோட்டத்து வீடுகளில் 2,416 முதியோர் கண்காணிப்பு

/

பெருந்துறை சப்--டிவிஷனில் தோட்டத்து வீடுகளில் 2,416 முதியோர் கண்காணிப்பு

பெருந்துறை சப்--டிவிஷனில் தோட்டத்து வீடுகளில் 2,416 முதியோர் கண்காணிப்பு

பெருந்துறை சப்--டிவிஷனில் தோட்டத்து வீடுகளில் 2,416 முதியோர் கண்காணிப்பு


ADDED : மே 10, 2025 01:16 AM

Google News

ADDED : மே 10, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, சிவகிரி அருகே நடந்த இரட்டை கொலையால், பெருந்துறை சப்-டிவிஷனில் பண்ணை மற்றும் தோட்டத்து வீடுகளில் வசிக்கும், 2,416 முதியவர் விபரம் கணக்கெடுத்து, கண்காணித்து வருகின்றனர்.

சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்த ராமசாமி, 75, - பாக்கியம், 65, தம்பதி, சமீபத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். 11 பவுன் நகை, பணம் கொள்ளை போனது. எஸ்.பி., சுஜாதா தலைமையில், 10 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடும் பணி நடக்கிறது. இதில்லாமல், 21 போலீஸ் குழுவினர், துப்பாக்கியுடன் வாகன ரோந்து நடத்துகின்றனர்.

சிவகிரி போல் மீண்டும் நடக்காமல் தடுக்க, ஈரோடு, நீலகிரி, நாமக்கல் மாவட்ட போலீசார் கொண்ட, 68 குழு அமைத்து, தோட்டத்து வீடு, பண்ணை வீட்டில் தனியாக வசிக் கும் முதியோர், குடும்பமாக வசிப்போர் விபரம் சேகரித்து, இரவு, பகலாக கண்காணிக்கின்றனர்.

பெருந்துறை சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பெருந்துறை, காஞ்சிகோவில், சென்னிமலை, அரச்சலுார், வெள்ளோடு, கொடுமுடி, சிவகிரி, மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் கண்காணிக்கப்பட வேண்டிய, தனியாக வசிப்போர் விபரம் சேகரித்துள்ளனர். இதன்படி சிவகிரியில்-258 வீடுகள், பெருந்துறை சப்-டிவிஷனில், 2,000 வீடுகள் உட்பட, 2,416 முதியோர் தனியாக வசிப்பது தெரிய வந்து, அவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. 'சிசிடிவி' கேமரா பொருத்தாத வீடுகள், பண்ணை வீடுகள், தோட்டத்து வீடுகளில் கேமரா பொருத்த போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us