sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருப்பூர் மாவட்டத்தில் 25,863 பேர் எழுதுகின்றனர்

/

திருப்பூர் மாவட்டத்தில் 25,863 பேர் எழுதுகின்றனர்

திருப்பூர் மாவட்டத்தில் 25,863 பேர் எழுதுகின்றனர்

திருப்பூர் மாவட்டத்தில் 25,863 பேர் எழுதுகின்றனர்


ADDED : மார் 02, 2025 01:43 AM

Google News

ADDED : மார் 02, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டத்தில் 25,863 பேர் எழுதுகின்றனர்

திருப்பூர்:தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு, நாளை (3ம் தேதி) துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், தனியார், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் என, 217 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 25 ஆயிரத்து 863 பேர் எழுத உள்ளனர். இதில், 11 ஆயிரத்து 874 மாணவர்கள்; 13 ஆயிரத்து 989 மாணவியர் அடங்கும். தனித்தேர்வர்களாக, 379 பேர் தேர்வெழுதுகின்றனர்.

மாவட்டத்தில், 92 பள்ளிகள் தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. மாணவ, மாணவியருக்கான பெஞ்ச், டெஸ்க் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மாணவர்களின் தேர்வு எண்களை எழுதும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

தேர்விற்கான வினாத்தாள், மாவட்டத்தில், 4 இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு, 24 மணி நேரமும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது; சுழற்சி முறையில் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பொதுத் தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக, 92 தலைமையாசிரியர்கள், 92 துறை அலுவலர்கள், 1,570 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியாற்றவுள்ளனர்.






      Dinamalar
      Follow us