/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதும் 23,976 பேர்
/
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதும் 23,976 பேர்
ADDED : மார் 02, 2026 05:39 AM
ஈரோடு: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 23,976 பேர்
எழுதுகின்றனர்.
அரசு, நிதியுதவி, தனியார் பள்ளி மாணவ, மாணவியர் என, 23,307 பேர், தனித்தேர்வர், 669 பேர் என, 23,976 பேர், 109 மையங்களில் எழுதுகின்-றனர். இதில், 367 ஸ்கிரைபர் (சொல்வதை எழுது-பவர்) உள்ளனர். தேர்வு பணிக்கு ஏற்கனவே முதுகலை ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள் உடனுக்குடன் மையத்துக்கு செல்ல, 4 வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே துறை அலுவலர்களுக்கு ஒருங்கி-ணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம், குடிநீர், கழிப்பிடம், சுகாதார வசதிகளை உறுதி செய்ய அந்தந்த துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்-ளது. தேர்வு ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் மான்விழி தலைமையில் பள்ளி கல்வி துறையினர் செய்துள்ளனர்.

