ADDED : ஆக 12, 2026 06:40 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:அறச்சலுார்
போலீசார் பழையகோட்டை செக்போஸ்ட் அருகே வாகன தணிக்கையில்
ஈடுபட்டனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த மூவரிடம் சோதனை செய்தனர்.
அதில் சாக்குப்பை இருந்தது.
அதில் ஐந்து கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் திருப்பூர் சிறு பூலப்பட்டி மாஸ்கோ நகர்
அழகர்சாமி,
41; புதுக்கோட்டை திருநல்லுார் தங்கநிலா, 42; திருப்பூர்
வேலம்பாளையம் நாகராஜ், 46, என தெரிந்தது. மூவரையும் கைது செய்து,
கஞ்சாவுடன் மொபட்டை பறிமுதல் செய்தனர்.
