sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஏக்கருக்கு 3,000 கிலோ நெல் விளைச்சல் மாநிலத்தில் கொடிவேரி பாசனம் முதலிடம்

/

ஏக்கருக்கு 3,000 கிலோ நெல் விளைச்சல் மாநிலத்தில் கொடிவேரி பாசனம் முதலிடம்

ஏக்கருக்கு 3,000 கிலோ நெல் விளைச்சல் மாநிலத்தில் கொடிவேரி பாசனம் முதலிடம்

ஏக்கருக்கு 3,000 கிலோ நெல் விளைச்சல் மாநிலத்தில் கொடிவேரி பாசனம் முதலிடம்


ADDED : நவ 10, 2024 02:51 AM

Google News

ADDED : நவ 10, 2024 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் கடந்தாண்டு, ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பகுதியில், 24,613 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவில் ஏக்கருக்கு, 3,000 கிலோ விளைவித்து முத-லிடம் பெற்றது.இதுபற்றி கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி கூறியதாவது: கொடிவேரி அணை பாசனத்துக்கு உட்பட்ட தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் ஆயக்கட்டு பகுதியில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், 37 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கடந்த, 7ம் தேதி முதல் செயல்படுத்துகிறது. மத்திய அரசு நடப்-பாண்டு நாடு முழுவதும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார கொள்-முதல் விலையாக கிலோவுக்கு, 23.20 ரூபாய், மாநில அரசின் ஊக்கத்தொகை கிலோவுக்கு, 1.30 ரூபாய் சேர்த்து, 24.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில், அரசின் நேரடி நெல் கொள்-முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட, 71,660 டன் நெல்லில், 24,613 டன் கொடிவேரி அணை பாசனத்தின் தடப்-பள்ளி - அரக்கன்கோட்டை ஆயக்கட்டில் விளைந்தது. இதில் தமிழகத்திலேயே கொடிவேரி பாசனத்தில்தான், ஏக்கருக்கு சராசரி-யாக, 3,000 கிலோ விளைவித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us