ADDED : டிச 04, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 4-
புயல் காரணமாக சில தினங்களாக ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக நம்பியூரில், 33 மி.மீ., மழை பதிவானது.
பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-9.30, மொடக்குறிச்சி-13, கொடுமுடி,பெருந்துறை தலா-6, சென்னிமலை-7, பவானி-7.60, கவுந்தப்பாடி-3.80, அம்மாபேட்டை-20.20, வரட்டுபள்ளம் அணை-4, கோபி-10.20, எலந்தகுட்டை மேடு-11.20, கொடிவேரி-5, குண்டேரிபள்ளம் அணை-9.20, சத்தி-5, பவானிசாகர்-6.80, தாளவாடி-23.20. மழைக்கு தாளவாடியில் ஒரு வீடு இடிந்து விழுந்தது.