/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு ஜி.ஹெச்., சித்தா பிரிவில் 3,782 பேருக்கு வர்ம சிகிச்சை
/
ஈரோடு ஜி.ஹெச்., சித்தா பிரிவில் 3,782 பேருக்கு வர்ம சிகிச்சை
ஈரோடு ஜி.ஹெச்., சித்தா பிரிவில் 3,782 பேருக்கு வர்ம சிகிச்சை
ஈரோடு ஜி.ஹெச்., சித்தா பிரிவில் 3,782 பேருக்கு வர்ம சிகிச்சை
ADDED : டிச 29, 2025 09:39 AM
ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சித்தா பிரிவு செயல்படுகிறது. இங்கு தினசரி, 250க்கும் மேற்பட்ட மக்கள், சிகிச்சை பெறுகின்-றனர். சிறப்பு சிகிச்சையாக சர்க்கரை நோய், தொற்றா நோய்களுக்கு செவ்வாய், சனிக்கிழமை-களில் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் சித்தா மருத்துவ பிரிவில் இது-வரை, 89,113 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட-தாக, சித்தா மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவ-மனை சித்தா மருத்துவர்கள் கூறியதாவது: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சித்தா பிரிவில் நோயாளிகள் தங்கி இருந்து சிகிச்சை பெறவும் வசதிகள் உள்ளன. உள்நோயா-ளிகளுக்கு ஒத்தடம், நீராவி குளியல், வர்ம சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை, 80 ஆயிரம் வெளி நோயாளிக-ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. உள் நோயா-ளிகளாக, 5,331 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். வர்ம சிகிச்சை மூலம், 3,782 பேர் பயன் பெற்றுள்ளனர். நடப்பாண்டில் மொத்தம், 89 ஆயிரத்து, 113 பேர் சித்தா மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்றுள்-ளனர். இவ்வாறு கூறினர்.

