ADDED : செப் 15, 2026 07:17 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்;சத்தியமங்கலத்தை
அடுத்த ஏ.ஜி.புதுார் செங்கோட்டை நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 35;
சமையல் தொழிலாளி. திருமணமாகி மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம்
அதே பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.
போதை
தலைக்கேறிய நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது
செந்தில்குமாரை பீர் பாட்டிலால் தாக்கியதில் சம்பவ இடத்தில்
பலியானார். அவருடன் சென்றவர்கள் ஓடி விட்டனர். செந்தில்குமார் உடல்
அப்பகுதியில் சாக்கையில் நேற்று காலை கிடந்தது. சத்தியமங்கலம்
போலீசார் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். இது தொடர்பாக நான்கு பேரை பிடித்து விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
