sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிவேரி வரும் சுற்றுலா பயணிகளால் ஒரே ஆண்டில் ரூ.49 லட்சம் வருவாய்

/

கொடிவேரி வரும் சுற்றுலா பயணிகளால் ஒரே ஆண்டில் ரூ.49 லட்சம் வருவாய்

கொடிவேரி வரும் சுற்றுலா பயணிகளால் ஒரே ஆண்டில் ரூ.49 லட்சம் வருவாய்

கொடிவேரி வரும் சுற்றுலா பயணிகளால் ஒரே ஆண்டில் ரூ.49 லட்சம் வருவாய்


ADDED : பிப் 08, 2024 12:06 PM

Google News

ADDED : பிப் 08, 2024 12:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: சுற்றுலா பயணிகள் வருகையால் கடந்த ஒரே ஆண்டில், கொடிவேரி தடுப்பணை மூலம், 49.47 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கின்றனர். அரசு விடுமுறை நாட்கள், பொங்கல், கரிநாள், தமிழ் புத்தாண்டு, ஆடி-18, தீபாவளி உள்ளிட்ட நாட்களில் பயணிகள் குவிகின்றனர். கடந்த, 2014 நவம்பர் முதல், அணை வளாகத்துக்குள் நுழைய சுற்றுலா பயணிகள் ஒருவருக்கு ஐந்து ரூபாய், நுழைவு கட்டணமாக நீர்வள ஆதாரத்துறை சார்பில் வசூலிக்கப்படுகிறது. கொடிவேரி தடுப்பணை மூலம், ஆண்டுதோறும் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.

கடந்த, 2023 ஜனவரியில், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் விடுமுறை என்பதால் அந்த ஒரு மாதத்தில் மட்டும், 77 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்துள்ளனர். இதையடுத்து, கல்வி நிறுவனங்களின் கோடை விடுமுறையால் ஏப்ரலில், 1.23 லட்சம் பேரும், மே மாதத்தில், 1.78 லட்சம் பேரும் வருகை புரிந்துள்ளனர். ஜூனில், 96 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர். 2023ல், 12 மாதங்களில் கொடிவேரி தடுப்பணைக்கு மொத்தம், 8.65 லட்சம் பேர் வருகை புரிந்ததால், 49.47 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. அந்த தொகை அனைத்தும், நீர்வள ஆதாரத்துறையின் வருவாய் பிரிவு கணக்கின் மூலம் வரவு

வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us