/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விநாயகர் சதுர்த்திக்காக 50 சிறப்பு பஸ் இயக்கம்
/
விநாயகர் சதுர்த்திக்காக 50 சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : செப் 06, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, ஈரோடு அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
இதன்படி இன்று முதல், 8ம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாள், முகூர்த்த தினம் என்ற ரீதியில் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கு வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக, 50 சிறப்பு பஸ் இயக்கப்படுவதாக, பொது மேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.