/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
58 டன் பட்டாசு கழிவு மாநகரில் அகற்றம்
/
58 டன் பட்டாசு கழிவு மாநகரில் அகற்றம்
ADDED : நவ 03, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
58 டன் பட்டாசு கழிவு
மாநகரில் அகற்றம்
ஈரோடு, நவ. 3-
தீபாவளி பண்டிகையை ஈரோடு மாநகர மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மாநகராட்சியின், ௬௦ வார்டுகளிலும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இதனால் மாநகரில் எங்கு பார்த்தாலும் பட்டாசு கழிவு குவியல் குவியலாக கிடந்தது. இதை அகற்றும் பணியில், நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் முதல் நேற்று மதியம் வரை, 58 டன் பட்டாசு கழிவு அகற்றப்பட்டதாக, நகர் நல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.